Monday, December 19, 2011

சமூக அக்கறையில் ஈரோட்டின் பங்கு


   ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக கடந்த ஞாயிறு காலை பதிவர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. நாளைய சமூகத்தை உருவாக்குவதில் வலைப்பதிவர்களின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை பதினைந்து நபர்களை மேடையேற்றி அறிமுகம் செய்து வைத்த போது உணரச் செய்தது. 

        
         ஏதோ பொழுது போக்குக்கு எழுதுபவர்களை , இணையத்தின் முக்கியத்துவத்தை இந்த அறிமுகம் உணர்த்துவதாக இருந்தது. புதியவர்களுக்கு ஒரு அறிமுகத்தையும் , அவர்களுக்கு தேவையான உற்சாகத்தையும் , அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. 







         சமூகப் பங்களிப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை உணர்த்துவதாக சிறப்பு அழைப்பாளர் ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு அமைந்தது. எழுத படிக்க தெரிந்த எவனும் புத்தகம் வாங்கி வாசிக்க  வேண்டும் என்ற உணர்ச்சிகரமான பேச்சு அவரின் சமூக அக்கறையை உணர்த்துவதாக அமைந்தது.  



    சமூகத்தில் சிறந்த தலைவனாக விளங்க உழைப்பும் , உண்மையும் எவ்வளவு முக்கியத்துவம் . ஆம் , பிற துறைகளில் உழைப்பும் , உண்மையும் முழுமையாக  இல்லையெனில் பாதிப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே. ஆனால், சமூக பங்களிப்பில் என்பது இச்சமூகத்தின் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் காரணமாகவும் , சமூகத்தின் நேர்மறையான வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துவிடும்.   கதிர் , தாமோதர் சந்துரு, ஜாபர் , லவ்டேல் ….என பெயர் சொல்லி எழுதி தள்ள ஆசை இருந்தாலும் ,ஈரோடு பதிவர்களின்  தோழமைப்பண்பு, கட்டுப்பாடு, நம்பகத்தன்மை , கவர்ச்சி , அத்துடன் போட்டிப்போடும் பண்பு என்னை வியக்க வைக்கிறது. அனைவரின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த ஒரு பரிசு தான் அரங்கம் நிரம்பி வழிந்தற்கு சாட்சியாக அமைந்திருந்தது. கல்யாண விருந்தை போன்ற பிரமிப்பு… முதல் நாள் இரவில் இருந்து ஆரம்பித்து , மறுநாள் மதியம் வரை சைவம் , அசைவம் என நிறைவான விருந்து…. இவர்களால் மட்டும் எப்படி சாத்தியம் என மதுரை பதிவர்களை மட்டுமல்ல அனைத்து பதிவர்களையும் வாய் பிளக்க செய்யும் பெருமை ஈரோடுக்கே உள்ள தனித் திறமை ….! 



    இந்த சந்திப்பு எனக்கு நிறைய நண்பர்களை தேடி தந்துள்ளது. புது உற்சாகத்தை , உத்வேகத்தை கொடுத்துள்ளது. சமூகத்தில் எனக்குள்ள பொறுப்பை உணர்த்துவதாக உள்ளது. இது வருங்காலத்தில் நல்ல மாற்றம் தரும் அரசியல் அமைப்பாகவும் மாறலாம் என மணிஜி சிரித்துக் கொண்டே வெற்றி சின்னத்தை காட்டி … இந்த நிகழ்ச்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதை பாருங்கள். 

Saturday, December 3, 2011

இவர்களையும் புறக்கணிக்கலாமா?


    இன்று சர்வதேச மாற்று திறனாளிகளின் தினம். மாற்று திறனாளிகள் என்பதனாலே குறைபாடு உடையோர் மனம் நெகிழ்ந்து விடுவர் என்று கருதினால் , அது போன்று ஒரு மூடதனம் வேறு ஒன்றும் இல்லை. இந்த தருணத்திலாவது , (மருத்துவ ரீதியாக இந்தியாவில் வெளிப்படையாக தெரியக்கூடிய ஊனத்தில் சதவீதம் 60% உள்ளவர்கள் மட்டுமே ஊனமுற்றோர் என கருதப்படுகின்றனர்.) மாற்று திறனாளிகளை நினைவு கூர்ந்து அவர்களையும் சக மனிதனாக கருதி, நம்மோடு பிறரைப்போல வாழ மதிப்பு அளிக்க வாய்ப்பு கொடுப்போம்.
    என் நண்பர் பேருந்தில் கன்னியாகுமரியிலிருந்து வரும் போது, ஒரு நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய மாற்றுத் திறனாளியின் அடையாள அட்டையை வாங்கிப் பார்க்காமலே , ”உயிர வாங்குரதுக்குன்னே.. வந்துட்டானுங்க… பார்த்த நல்லா தானே இருக்க… டிக்கட் எடுக்க வேண்டியது தானே ”என ஏளனமாக பேசிய நடத்துனரை பற்றி சொல்லி வருத்தப்பட்டதை நினைவு கூற விரும்புகிறேன். உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம்.

     தயவு செய்து அவர்களையும் கொஞ்சம் தயவு கூர்ந்து ஒரு சக மனிதனாக பாருங்கள். இன்று காலை என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த ஆனந்த வள்ளி என்ற ஆசிரியை கூறும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பின், நடத்துனர் சக பயணியிடம் , ”இவன ல்லாம் பார்த்த மெண்டல் மாதிரியா தெரியுது, எங்க ஏறணும் , எங்க இறங்கணும் ன்னு தெரியுது.. இவனுக்கு போய் சலுகை கொடுக்குறாங்க பாருங்க..” என்று பேசியது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

     இதற்காக நான் நடத்துனர் எல்லாம் மோசமாக நடந்து கொள்கின்றனர்  என்ற வாதத்திற்கு வரவில்லை. நம்மில் பலர் மாற்று திறனாளிகளை ஊதாசினப்படுத்தியும், அவமதித்தும், ஒதுக்கியும், புறக்கணித்தும் , இவ்வுலகில் வாழ தகுதியற்றவர்கள் என்றும் கருதுகிறோம். ஆனால், பன்னிரெண்டாம் நூற்றாண்றிலே இரண்டாம் ஹென்றி அவர்கள் மனவளர்ச்சி குன்றியோருக்கு என சட்டம் இயற்றியுள்ளார். மரியா மான்டிசோரி அவர்கள் சென்னையில் மாற்று திறனாளிக் குழந்தைகளையும் பிற குழந்தைகளுடன் கல்வி கற்று தந்தார்.

    இன்று நல்ல நிலையில் பயிலும் பள்ளிகளில் , மாற்று திறனாளிகளையும் சேர்த்து படிக்க வைக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் அவர்களையும் சேர்த்து எடுத்து வந்தாலும், பலரால்(குடும்பத்தில் உள்ளவர்களே) அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, சேர்க்கப்படாமல் உள்ளனர். இன்று அரசு அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் , உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் , அனைவருக்கும் கல்வி திட்டத்தில் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து உள்ளது. அவர்கள் மூலமாக சாதாரண பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியருக்கான கல்வியையும் வழங்கி , ஆசிரியர்களை மாற்று திறனாளிகளின் சிறந்த கல்விக்கு உறுதுணைக்கு வழிவகுத்து, பயிற்சி அளித்து வருகிறது.

    அரசு ஒருபுறம் மாற்று திறனாளிகளின் நலம் பற்றி சிந்தித்து , தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் , சக மனிதர்களாகிய நாம் நம் மனதில் மாற்று சிந்தனைகளை விதைத்து , அவர்களை நம்மில் ஒருவராக கருதி , அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் , திறனையும் வளர்க்கும் விதத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பார்வையற்றோருக்கு கண் பார்வை மட்டும் தெரிவதில்லை. காது கேளாதவருக்கு கேட்கும் திறன் மட்டும் இல்லை. வாய் பேசத் தெரியாதவர்களுக்கு பேச இயலாது. கால் ஊனமுற்றோருக்கு காலின் செயல்பாடு குறைப்பாட்டின் அளவினைப் பொருத்து செயல்பாடு அளவு இருக்கும். இவர்களுக்கு எல்லாம் இவர்களின் ஊனம் தெரியும் அல்லது உணர முடியும். சற்று சிந்தியுங்கள். மனவளர்ச்சி குன்றியோருக்கு தனக்கு என்ன குறைபாடு உள்ளது என்பதே அவர்களுக்கு தெரியாது. நீ லூசு என்றாலும் புரியாது?  அவர்களை புறக்கணிக்கலாமா?


     மனவளர்ச்சிக் குன்றியோருக்கு  தேவையான அதாவது அன்றாட செயல்பாடுகளான குளித்தல், பல்துலக்குதல், சிறுநீர் மற்றும்  மலம் கழித்தல், உடம்பினை தூய்மையாக வைத்திருத்தல், சாப்பிடுதல், கை கழுவுதல்   என்ற தன்னை தானே தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் அடிப்படை செயல்பாடுகளை கற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களின் பணியினை நினைத்து பார்க்க வேண்டும். இத் தருணத்தில் அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.

     இவர்களுக்காக செயல்படும் மதுரையை சார்ந்த அன்பகம் உண்மையிலேயே சிறந்த நிறுவனம் . அங்கு சிறப்பு ஆசிரியருக்கான பயிற்சி பெற நான் கடந்த முப்பது நாட்களாக செல்கிறேன். அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் அக் குழந்தைகளை அவர்கள் பராமரிக்கும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். அக்குழந்தைகளை பார்க்கும் போது , கடவுள் இவ்வுலகில் நம்மை எவ்வளவு சிறப்பாக படைத்துள்ளார் என்பதன் அருமை புரியும். நாம் பிறந்த நோக்கத்தின் புனிதம் புரியும் . தவறு செய்த யாரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம் இக்குழந்தைகளுடன் ஒரு வாரம் தங்கியிருந்து பணிவிடை செய்ய சொல்லுங்கள் . அதுவே அவர்களை நல்வழிப் படுத்திவிடும்.

மாற்று திறனாளிகள் பிறக்காமல் இருக்க….
1.   சொந்தத்தில் திருமணம் வேண்டாம்( காதல் செய்தா சும்மா கட்டி வைங்கப்பா)

2.   இரத்த வகை சரிபார்த்து திருமணம் செய்தல் நலம். ஆர்ஹெச்+ க்கும் + க்கும் திருமணம் நலம். _ க்கும் – க்கும் திருமணம் நலம். –க்கும்  +  க்கும் என்றாலும், + க்கும் – க்கும் என்றாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் குழந்தைப் பெற்றுக்கொள்ளல் நலம்.
3.   
கற்பகாலத்தில் சந்தோசமாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்ள வேண்டும்.

4.   கருவுற்ற காலத்தில் அடிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
5.   பயிற்சி பெற்ற அனுபவமிக்க மருத்துவர் உதவியுடன் பிரசவம் பார்க்க வேண்டும்.

6.   பிறந்தவுடன் குழந்தை அழுவதில் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.

7.   பதினெட்டு வயதுக்கு முன் திருமணம், மூப்பத்தைந்துக்கு மேல் திருமணம் செய்து , குழந்தை பிரசுவித்தல், குறைபாடுடைய குழந்தைக்கு வாய்ப்பளிக்கிறது.

Wednesday, November 30, 2011

பொய்


    ராகவன் மிகவும் கோபமாக சென்றான். அவன் இதற்கு முன் மோனிகாவிடம் இப்படி பேசியது கிடையாது. மோனிகா ராகவனின் ஒரே செல்ல மகள் . இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். மோனிகா அப்படி ஒன்றும் பெரிதாக பொய் சொல்லவில்லை.

வெள்ளி அன்று நடைப்பெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அவளின் ஆசிரியை ராணியை சந்தித்து பேசி விட்டு வந்தான். ஆசிரியை ராணியும் அப்படி ஒன்றும் தவறாக சொல்லி விட வில்லை. மோனிகா ஒரு டாக்கேட்டிவ். அதே சமயம் எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம்.வகுப்பறையில் கூர்ந்து  கவனிப்பாள் . எந்த பாடத்திலும்  நூறு மார்க் எடுக்கவில்லை என இவனும் இவனின் மனைவியும் புலம்பி தவித்தார்கள். மோனிகாவின் அம்மாவும் ஆசிரியை என்பதால் , நிதானமாகவே, நல்ல முறையிலேயே மோனிகாவை பற்றி பேசினார்கள்.
பள்ளி விட்டு வந்தவுடன் பேசிக் கொண்டிருந்த ராகவன், கோபப்பட்டு பேசுவதை கண்டு , மாளவிகா தன் குழந்தையை அள்ளிக் கொண்டாள்.

உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துக் கொண்டது …?பிள்ளையை அடிக்க வருகிற மாதிரி பேசுறீங்கஎதுனாலும் என் கிட்ட சொல்லுங்க..சும்ம அதட்டுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க

 விவரம் தெரியாமாபேசாத…. இன்னைக்கு பள்ளியில அவுங்க டீச்சர்உங்கம்மா.. என்ன சொன்னாங்கன்னு கேட்டதுக்கு என்ன சொல்லி யிருக்கா..தெரியுமா..?”

   ”இதில என்னங்க தப்பு…. வந்தவுடனே எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டாநல்ல விதமா தானே சொல்லியிருக்கா….”

எதுக்கும் பொய் பேசுறது எனக்கு பிடிக்காதுஇந்த சின்ன பொய் பெரிசா சொல்ல தோணும்

உங்க ஆபிசர் புத்திய குழந்தைக்கிட்ட காட்டாதீங்ககுழந்தைன்னா அப்படி தான் இருக்கும்என் குழந்தை பொய் ஒண்ணும் சொல்ல வில்லை…”

வீட்டில உங்கம்மா என்ன சொன்னாங்கன்னா.. ?எதுவும் சொல்லலைன்னு சொல்ல வேண்டியது தானே..”

அவுங்க மிஸ் இன்னும் நல்ல சொல்லி தரட்டுமேன்னுநல்லதா தானே சொல்லி யிருக்கா.. அதுக்கு ஏங்க இப்படி கத்து கத்துறீங்க…”

அம்மா.. எதுவும் பேசல.. என்னை தான் நல்ல படிக்க சொன்னாங்கன்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே..”

என்ன புரியாம சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்கஎங்க அம்மா உங்கள நல்ல மிஸ்ன்னு சொன்னாங்க…. நல்ல சொல்லி தருவாங்கநீ கூர்ந்து கவனிச்சு செண்டம் எடுக்கணும்ன்னு சொன்னாங்கன்னு தானே சொல்லியிருக்கா… “

எப்படி பொய் பேசியிருக்கா பார்த்தியாஅப்பதான் இவ டீச்சர் நாளைக்கு உன்னை பார்க்கும் போது நல்ல படியா பேசுவான்னும்.. உன் கிட்ட தப்பா பேச மாட்டான்னு பிளான் பண்ணி பொய் பேசியிருக்கா…”

இதில என்ன தப்பு இருக்குதன்னையும் பாதுகாத்து, என்னையும் நல்ல எண்ணத்தோடு சொல்லியிருக்கிறஅவ சமயோசித புத்தியை பாராட்டுங்க….”

  ராகவன் தன் வேகன் ஆர் காரை ஓட்டி கொண்டேரெம்ப கோபப் பட்டுவிட்டோமோ என யோசித்தே வண்டியை திருப்பும் போதுவண்டி மாறு பட்ட தன்மையுடன் ஓடுவதை காண்கிறான். மெதுவாக காரை நிறுத்தி பார்க்கும் போது முன் சக்கரம் பஞ்சர் . அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் காற்று நிரப்பி அருகிலுள்ள பஞ்சர் கடையை விசாரித்து விரைந்தான். இரண்டு நாட்கள் முன் தான் காரினை கேட் கதவில் மோதி முன்னாடி பேனட் நெளிந்து இருந்தது.

கோபம் மனிதனை எல்லா வழிகளிலும் சீரழித்து விடும் என்பது அவனுக்கு இப்படி பட்ட கஷ்டங்கள் வரும் போது தான் உணரச் செய்யும். மோனிகா மீதான கோபத்தில் வந்தவன் , எதிரில் வரும் லாரியை கவனியாமல் முந்தி செல்ல எத்தனித்தான், முடியாததால் குப்பை நிறைந்த அந்த மேட்டுப் பகுதியில் வண்டியை ஏற்றி இறக்க ஏதோ குத்தி பஞ்சராகி யிருந்தது .

அண்ணே , வண்டியை கொஞ்சம் முன்னாடி கொண்டு வாங்கண்ணே…” என்ற சிறுவன் இவனை பார்த்தவுடன் , ”என்ன சார் .. பஞ்சரா..?” என்று சொல்லிக் கொண்டே ஸ்பானரையும் , சாக்கியையும் கொண்டு வந்தான்.

என்ன சார்பார்த்து ஓட்டக்கூடாதா…? ரோடாவா சார் இருக்கு நாம தான் சுலோவா வரணும்வேகமா வந்த இப்படி தான் சார் ஆணி குத்தி பஞ்சராயி போகும்…” என்ற சிறுவனின் பேச்சில் ஆர்வமாகி..

சரி என்ன செய்ய.. பஞ்சர் சொல்லிகிட்ட குத்துது…?”
ஜாக்கியை கொண்டு வண்டியை ஏற்றினான். நாலு போல்ட் நட்டை கழட்டினான், டயரை அப்படியே உருவினான்.

எத்தனை பஞ்சர்ன்னு பாருப்பாசீக்கிரம் ஒட்டிக் கொடு…”

சார் இது டீயுப் லஸ் டையர் சார்.. இதுக்கு முன்னாடி பஞ்சர் பார்த்தது இல்லையா….? சார் பொறுமையா பாருங்க.. தண்ணில முக்கி ஏர் போற இடத்தை  கண்டு பிடிக்கணும்அப்புறம் இந்த மெழுகு போன்ற இந்த குச்சியை அங்க வைச்சு ஒரு அமுக்கு தான்…”

டேய்காத்து போற இடத்தில எதாவது இருக்கான்னு பாருடா.. ஆணியிருந்த எடுத்து போடு…”

சார்ஆணியில்ல சார்இது பீங்கான்.. இத வெளிய எடுக்க முடியாதுஉள்ள தான் தள்ளி விடணும்..”

டேய் உள்ள போனா .. அது மீண்டும் பஞ்சராகாதா..?”
சார் பீங்கான் பொடி பொடியா ஆகிடும்.. கவலை படாதிங்க.. அது டியுப் லஸ்ஒண்ணும் ஆகாதுஎன சொல்லி கொண்டே பீங்கானை டயரில் ஓட்டை போட்டு உள்ளே தள்ளினான்.

சார்.. முப்பது பாயிண்டு ஏர் வச்சுருக்னேன்போதுமா…”ராகவன் தலையாட்டி முடிக்கும் முன் சக்கரத்தை நோக்கி நகர்ந்து இருந்தான்.
டயரை மாட்டிய சிறுவனை பார்த்து
உனக்கு என்ன வயசு இருக்கும்..?”
ராகவனை ஒருவித சந்தேக பார்வை பார்த்து…( தொழிலாளர் நலவாரிய அதிகாரியாக இருக்குமோ என்று )
சார் சத்தியமாபதினெட்டு சார்.. பார்த்த என்ன ஒரு பத்து வயசு
பையனா தான் நினைப்பீங்க..”

என்னை விட சின்ன பசங்கள் எல்லா என்ன போடா வாடான்னு பேசும் போது எனக்கு….. கோபமா தான் வரும்.. இருந்தாலும் என்ன செய்ய முடியும்.. என் உருவம் அப்படின்னு நானே நொந்துக்குவேன் சார்…”

நீங்களும் அதே போல ஏமாந்திட்டீங்க..….இத விட சார் ஆறாம் வகுப்பு தான் சார் படிப்பான் .. என்ன விட கொஞ்சம் ஹைட்டு ஜாஸ்தி .. என்ன போடா.. அந்த பாலை(பந்தை) எடுத்து போடுடான்னு அடிக்க வர்றான்எல்லாம் என் தலையெழுத்து சார்..”

எத்தனாவது வரை படிச்சு இருக்கா…?”

அத விடு சார்என்ன சார் .. வண்டியை எங்க கோர்த்திருக்கீங்க…?”

“…..”

வண்டியை பார்த்து ஓட்டணும் சார்லேசா இடிச்சா கூட காசு எக்கு தப்பா ஆகும் சார்ஒரு பத்தாயிரம் பிடிங்கிறுவானுகநாம சுதாரிப்பா வந்தாலும்.. போறவன் வந்து இடிச்சுட்டு போயிடுவான் சார்…”

நல்ல பெரிய மனுசனாட்டம் பேசுறடா..”

சார் ..நிசமாலுமேநான் பெரியவன் தான் சார்.. என்ன சின்ன பையன்னு நினைச்சுட்டீங்கல்லா.. சின்ன பையன்னா வேலைக்கு சேர்ப்பாங்கலா சார்…”
சிறுவன் தன் வயதை மறைக்க தன் வேலையை காப்பாற்ற , எப்படி சமாளிக்கிறான் என்பதை ரசித்தான். வாழ்க்கை போராட்டத்தில் இது போல சில பொய்களை சொல்லி தான் காலம் தள்ள முடியும் . இந்த மாதிரி பொய்கள் அவனையும் அடுத்தவரையும் பாதிக்காது என நினைத்த போது அவன் மனைவி மாளவிகா போன் வர ….

சொல்லு.. டயர் பஞ்சர் பார்த்துகிட்டு இருக்கேன்.. இப்ப வந்துடுவேன்.. மோனிகா படிச்சாளாஅப்பா கோபமெல்லாம் ஓடி போச்சுன்னு சொல்லு.. அவளுக்கு பிடிச்ச இடியாப்பம் வாங்கிட்டு வந்திடுறேன்..”